1967
திமுக முதன்
முதலில் ஆட்சி அமைத்தது. நானும் அந்த வருடம் தான் பிறந்தேன் .70களில், கான்வென்ட்கள் தமிழகத்தில்
மெதுவாக உதயமாகின, அதாவது English
மீடியம் ஸ்கூல்...எல்லா அப்பாக்களையும் ஆசைப்பட்டு
என்னையும் ,தாராபுரத்தில், ஆரம்பித்த, முத்து ஸ்கூலில், என்னை LKG (Yes) சேர்த்துவிட்டார், UKGயும் அங்கேதான்.Ba Ba Black sheep,
Twinkle Twinkle Little start,Humpty Dumpty.. அப்போதும் இதே.. மதியம் தூங்க வச்சு,
சாயங்காலம் பொரியும் பிஸ்கட்டும் தருவாங்க
... நான் Englsih
Medium படிப்பதில்
அப்பா அம்மா பாட்டி சித்தப்பா என அனைவருக்கும் பெருமிதம், எங்கே போனாலும் பையன் கான்வேண்டில்
படிக்கிறான் என பெருமை கூறி Englishல் எதாவது கேட்க சொல்ல, அனைவரும் என்னை கேட்கும் கேள்வி, What is your Name? பதில்தான் உங்களுக்கு தெரியுமே...
தாராபுரத்தில் இருந்து கோவைக்கு அப்பா மாற்றலாக , என்னை கவுண்டம்பாளையம் Guild of Service இன் சில்டர்ன்ஸ் ஸ்கூலில் சேர்த்து
விட்டனர்.பள்ளியில் என்னை விட அப்பா சைக்கிள்
வாங்கினார்.ஆரம்பத்தில் காலையில் அவரே என்னை பள்ளியில் விட்டு கூடு வர,பின்னர்
நாங்களே நடந்து போய் வந்தோம்... கிளாஸ் மேட்ஸ் மொத்தம் பத்தே பேர் அழகிய CO ED பள்ளி அது , ஐந்து ஏக்கர் இருக்கும் எங்கும்
மரங்கள்,புளி நாவல் பழ மரமும் உண்டு, புல்வெளி, வெல்வெட் பூச்சி, பொன்வண்டு, ஹெலன்
ஹெட்மிஸ்ட்ரெஸ், அழகிய பிரபா மிஸ், நித்தி ,குட்டி,கல்பூ,சுபாபெரியநாயகி, எலும்பு
மிஸ் இங்கிலீஷ் டுயுசன், Happy
Birtday To you,சாக்லேட்,distribution , ஒரு Birthdayஅப்பா பரிசளித்த Robinson crusoe, கிளாசில் சத்தமாக நாங்கள் பாடிய ,Old
MACDONALD had a farm E-I-E-I-O ..இன்னும் காதில் ஒலிக்கிறது.. ஒருமுறை நண்பனுடன்
பிளேடு வைத்து சண்டையிட்டு ,கையில் இன்னும் வீரத்தலும்புள்ளது.ஒன்றும் முதல் ஐந்துவரை அங்கே படிப்பு...இந்த ஸ்கூல் இப்போது
இல்லை என்பதில் வருத்தம் ..
6th
ஸ்டான்டர்ட்டுக்கு
அரசு உதவி பெறும் ,TARCHSS, முருகன் மில்ஸ்ல்,சேர்த்து விட்டார் அப்பா
,முதன் முதலாக, பள்ளிக்கு பஸ்ஸில் செல்ல ஆரம்பித்தேன்..இதுதான் நான் படித்த கடைசி CO ED ஸ்கூல் ..மிக பெரிய ஸ்கூல் பெரிய விளையாட்டு
மைதானம், காலையில் எப்போதும்TMSஇன் முருக பக்திபாடல்கள், PRAYER, தமிழ் தாய் வாழ்த்து,மாலை,தேசிய கீதம்.. பள்ளி
வகுப்புகள், மொத்தம் நாற்பது பேர் , இருபது ரேங்குக்குள் நான். டிபன்பாக்ஸ்
சாப்பாடு .தினமும் மதியம் கால்பந்து, , நந்தகோபால் வீட்டில் இருந்து வரும் மதிய
உணவுக்கு அடிதடி. பின்னர் அஞ்சு பைசா ஜவ்வரிசி குச்சி ஐஸ்.எலிப்புளுக்கை
மிட்டாய்....வகுப்பு குறும்புகள் அடிக்கடி பெஞ்சில் நிற்கவைப்பு, ஒருநாள் பெண் பிள்ளைகள்
வெளியேறும் முதல் மணி அடிக்கையில் நானும் போக, அடுத்த நாள் கிளாசுக்கு வெளிய முட்டி...கோகுல், ஹரி,ஹசிம்,
ராஜு, சின்ன தம்பி,நண்பர்கள்..
ஏழாவது பாதியில் அப்பாவுக்கு மதுரைக்கு Tranfer,அங்கு தல்லாகுளம் ACHSS எனப்படும் அமெரிக்கன் கல்லூரியின்
ஸ்கூல்...மதுரை அடடடா , நம்ம மண், தமிழர் தமிழின் பண்பாட்டை கட்டி காக்கும்
சொர்க்க பூமி.கோயில், குளம் கண்மாய், வயல், சல்லிகட்டு, மீன்பிடித்தல், ஏர்
ரைபீளில் கொக்கு வேட்டை, கபடி, உலக தமிழர் மாநாடு, திருட்டுத்தனமாக ஏறிக்குதித்து கால்பந்து ,முதல் சிகரெட், நாற்றம் அதை மறைக்க நாங்கள் பட்ட பாடு ,
நண்பர்களுடன் பார்த்த முதல் சினிமா...ஸ்கூலுக்கு எதிர்வீட்டில் இருந்த கிளாஸ் லீடர்ஸ்சோலைமலை
சீனிமலை நெருங்கிய நண்பர்கள், ஷங்கர், சாய்கனேஷ், ஜலீல், மோகன்,கிங்க்ஸ்லீ,
ஜான்பால்,வாடகை சைக்கிள், புதூர் பஸ் ஸ்டான்ட், கழக மன்றம், நாகூர் ஹனிபா பாட்டு,
கவர்ன்மென்ட் லைப்ரேரி,தங்கம் தியேட்டர், GTex டைலர், அழகர் கோவில், சித்திரை
திருவிழா.,பொருட்காட்சி, என சொல்லிகொண்டே போகலாம்..நான் படிக்கும் பொது அங்கு
கராத்தே ஹுசைன் அலி , மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பார்...தமிழ் மாஸ்டரும், கணக்கு
மாஸ்டர் மற்றும் ஞாபகம்...தினமும்
திருக்குறள் காலை பிரேயரில், ஒருமுறை எனக்கு துப்பார்க்கு, திக்கியது,
நினைவிருக்கிறது.பள்ளி அரை நேரம் என்பது கூடுதல் இன்பம், இன்டர்வலில் நாங்கள்
வாங்கி உண்ணும் உணவு பற்றி ஒரு பெரிய கதை எழுதலாம் வசந்த காலங்கள்...இந்திரா
காந்தி, கலைஞர், எம்ஜியார்,ரஜினி, ஜெயலலிதா அனைவரயும் அங்கு நேரில் பார்த்துள்ளேன்.பத்தாவதில்
முன்னூத்தி நாற்பது. டிப்ளோமா சேர்க்கலாம் என்று அப்பா
முயற்சித்தார் , மார்க் பத்தவில்லை பின்னர் எப்படியோ கஷ்டப்பட்டு 1ST க்ரூப் கிடைத்தது.. ஒருமுறை கிளாஸ் சண்டையில் பெஞ்சை உடைத்து,
பைன் கட்டினேன்..
+1 பாதியில் , சில காரணங்களால், மதுரையில்
இருந்து அப்பா அம்மா கரூருக்கு குடி பெயர
. அங்கே முனிசிபல் ஸ்கூல் வழக்கம் போல் A செக்சன் இங்கிலீஷ் மீடியம்.... அப்பா
கரூரில் இருந்து தினமும் திருச்சிக்கு ட்ரெயினில் பணிக்கு போய் வர, அவரை காலை மாலை
என இருநேரமும் சைக்கிளில் விடு கூடி வரும் பணியில் நான்... +1 வேறு ஸ்கூலில் இருந்து மாறி
வந்ததால்,கொஞ்சமே நண்பர்கள், முரளி , சாமியப்பன் , சிவா,ரஹீம் ரஜினி மற்றும் இளையராஜாவால்
இணைப்பு, பல தியட்டர்கள் பல படங்கள், டேப்பில் பாட்டு கேட்பது, Insect Collection , herbarium
, மாமாவின் வெல்ல ஆலை கரும்புச்சாறு , காவேரி,
அமராவதி ஆற்று குளியல் ஊர் சுற்றல் என
பொழுது இனிதே கழிந்தது . அப்பாவின் இன்ஜினியரிங் படிப்பு உந்துதலால், +2 A வகுப்பில்
புதிய தோழர்களுடன் சேர்ந்தேன், கிரி, ரவிசங்கர்,பத்மநாபன் ப்ரசென்ன,
செந்தில், மொசெஸ், பேரே சொல்லுமே, எப்படிப்பட்டவர்கள் என்று... அவர்களுடன் நாலு டியூசன் சேர்ந்தேன் ..மேத்ஸ், பிசிக்ஸ்,
கெமிஸ்ட்ரி , பயோலஜி, மேத்ஸ் வாரம் ஐந்து முறை மற்றவை வாரம் மூணு கிளாஸ..,
வகுப்பறை கவனிப்பதே இல்லை, இருந்தாலும்,கேள்வி கேட்டால் விடை சொல்லும் அளவு
கொஞ்சம் ஞானம் வந்தது...+2
Board Exam ,அப்பா SSLC எழுதிய அதே அறையில் நானும்
. +2 பாஸ், ஆகி,மார்க் பார்க்க,ஸ்கூலுக்கு
சென்ற போது , அனைவரும் என்னை ஆச்சர்யத்துடன் பார்க்க
என்னன்னு பார்த்தால் 988 மார்க்ககு ஸ்கூல் தேர்ட் ரேங்க்...சிரிக்காதீங்க
, முனிசிபாலிட்டி ஸ்கூல்னா அப்படிதான் ...
1984
வரை இருந்த
இன்டெர்வியு முறையை ,
MGR எடுத்துவிட்டு என்டரென்ஸ் கொண்டு வர, அந்த வருடம் , பழைய
ஒன்பது இன்ஜினியரிங் கல்லூரிகளுடன், புதியதாக முப்பது சுயநிதி கல்லூரிகள், ஹ்ம்ம் அத்துடனே
நின்றுருந்தால் நன்றாக இருந்திருக்கும்...என்டரென்சில் அதிகம் சோபிக்கவில்லை
,காரணம் என்டரென்ஸுக்கு சரியான
வழிகாட்டுதல் இல்லாமல் போனது ..DOTE அப்பளை செய்து விட்டு காத்திருந்தோம்... நடுவே , அப்பாவின் முயற்சியால்,IIT என்டரென்ஸ் வேறு.. நானெல்லாம் ,IIT பாஸ் செய்ய முடியுமா என்ன ஹா ஹா . இதன்
நடுவே நாலு ஆர்ட்ஸ் காலேஜுக்கு திருச்சியில்
விண்ணபிக்க அனைத்தும் கிடைத்தது, அப்போது Bsc கம்பூயுட்டர்,பேமஸ். St Josephல் BSc கணிதம் சேர்ந்துவிட்டேன்... ஹாஸ்டல்
கிடைக்காதலால், தனியார் விடுதியில் சேர்த்து
விட, முதன் முதலில் தனி ஜாகை மற்றும் ஹோட்டல் உணவு..அல்சர் வந்துவிட்டது...திருச்சி
நல்ல ஊர், பொழுது போக, மலைகோட்டை, ஸ்ரீரங்கம், பர்மா பசார், பல நல்ல ஹோட்டல்கள், நண்பர்கள்,
சிவராம், செந்தில்,ரகு என மூணு மாதம் கழிந்தது.பின்னர் அப்பா அம்மா , கரூரில்
இருந்து திருச்சிக்கு வீடு மாற்றி வந்து
விட...ஹௌசிங் யூனிட் வாழ்க்கை. .ஒரு நாள் காலேஜில் இருந்து திரும்பிய போது,
கரூரில் நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்காரர் மகன் உட்கார்ந்திருந்தார், விஷயம் DOTE வெய்டிங் லிஸ்டில் எனக்கு குமரகுருவில் காலேஜ்
அட்மிசன் கிடைத்த தபால்களை கரூரில்
இருந்து கொண்டு வந்த தேவ தூதன்...
காலையில் TCக்கு விண்ணபிக்க, என்ன உனக்கும் எஞ்சினீரிங்
கிடைச்சிடுச்சா என்று ,சலிப்புடன் அனுப்பி வைத்தார் பாதர்...
அப்பாவுடன் பஸ்ஸில் பொட்டி தூக்கியபடி
, பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம் ,நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் இருந்தது
கல்லூரி..ஹாஸ்டல் மகாலிங்கபுரம் மீனாக்ஷி கல்யாண மண்டபம், ஆ இனிய Pollachi Days, முதல் நாளே சிகரெட் பிடித்தது, தாடி,துரை,மற்றும்
நான் நண்பர்களானோம்... இந்திரா மரணம், SO ஈஸ்வரமூர்த்தி,அவர்களின் நடவடிக்கைக்கு முதல் ஸ்டைரைக்,
Food poison ஆகி அனைவரும் ஹோச்பிடல் அட்மிட், PAP
கேண்டீன்,,மாக்கிநாயக்கன்பட்டி, நண்பர் ரூம்கள், மெஸ்கள், பாலி டெக்னிக் பெண்கள்,
கேண்டின், லேபுக்கு,NGM
காலேஜ்,
கொத்துபரோட்டா , தேர்முட்டி, விடிய விடிய சீட்டு,பீடி நல்லப்பா ,துரைஸ், முருகாலயா தியேட்டர்கள்,
ரஜினி ரசிகர் மன்றம்...மாஸ்டர்ஸ், SO, மகாலிங்கம்சார், கோவிந்தராசுலு,சார், ராஜன்
சார்,காஜா சார், கோபால் சார், மணிமேகலை மேடம், வாசுதேவன் சார், பலர் நினைவுக்கு
வரவில்லை. நண்பர்கள், சிவராமகிருஷ்ணன், குல்பி, பவழ கண்ணன் , கண்ணதாசன், தாடி
செந்தில் ,துரை, ரவி, ரமேஷ், மாமா, ஜேபி, திண்டுக்கல் பிரபாகர்,கல்யான். அசோகன்,
ஜெய்சக்திவேல்,மோகன்,பாண்டியன்,ஹரி, மகேந்திரன்,செட்டி, சுந்தராஜ்,செல்வராஜு,
நடையன், வெங்கிடபதி , ஆரோக்கியராஜ்,மற்றும் Classmates மூன்றே பெண்கள், குழலி, உஷா,நஸ்ரெத்....பொள்ளாச்சி
நாட்களை பற்றி ஒரு நாவல் எழுதலாம் அவ்வளவு இருக்கு..நிறைய
எழுதினேன் ,சென்சாரில் , கட் , ஆயிடுச்சுங்க ...மற்றபடி மூன்று வருடம் பொள்ளாச்சியிலும் பின்னர் நான்காவது
வருடம் கோவையில் ஒருவழியாக படிப்பு முடித்து, 70ல் ஆரம்பித்த ஏட்டு கல்வியை 88ல் இனிதே நிறைவு செய்தேன், பிதா ,மாத குரு,
நண்பர்கள், துணையுடன்.....
பள்ளி கல்லூரி நாட்கள் தந்த பாடங்கள், அனுபவங்கள், இனிமை நினைவுகள் கடைசி
மூச்சு உள்ளவரை மறக்க மாட்டோம் என்பதை அனைவரும் ஒத்துகொள்வீர்கள்...
..